உலகம் முழுவதும் கரோனா தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 2.91 கோடியை எட்டியுள்ளது.

 

உலகம் முழுவதும் கரோனா தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 2.91 கோடியை எட்டியுள்ளது. நோய்த் தொற்றுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9,28,290 ஆக உயர்ந்துள்ளது. 
 
உலக நாடுகளில் கரோனா நோய்த் தொற்று பரவல் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் சனிக்கிழமை காலை நிலவரப்படி, உலக அளவில் மொத்த கரோனா பாதிப்பு 2,91,85,779 கோடியாக உள்ளது. பலியானோர் எண்ணிக்கை 9,28,290 ஆக உள்ளது. 
 
உலகளவில் கரோனா பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு 67,08,458 பேரும், இந்தியாவில் 48,46,427 பேரும், பிரேசிலில் 43,30,455 பேரும், ரஷியாவில் 10,62,811 பேரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று பாதிப்பை பொறுத்தவரை பிரேசிலை பின்னுக்கு தள்ளி இந்தியா இரண்டாவது இடத்துக்கு வந்துள்ளது. 
தற்போது 72,26,460 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 60,479 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கரோனா பாதித்து 21,031,029 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

நீட் தேர்வு மையத்துக்குள் செல்வதற்கு முன்பாக தாலிச்செயின், மெட்டி, பூ உள்ளிட்டவற்றை கழற்றிய புதுமணப்பெண்

 

திருநெல்வேலியில் நீட் தேர்வு மையத்துக்குள் செல்வதற்கு முன்பாக தாலிச்செயின், மெட்டி, பூ உள்ளிட்டவற்றை கழற்றிய புதுமணப்பெண் முத்துலெட்சுமி. படங்கள்: மு.லெட்சுமி அருண்
திருநெல்வேலியில் தாலிச்செயின், மெட்டியை கழற்றிய பின்னரே மையத்துக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

நாடு முழுவதும் கடும் கட்டுப்பாடுகளுடன் நேற்று பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணிவரை நடத்தப்பட்டது. இத்தேர்வுக்காக காலை 11 மணி முதல் மாணவ, மாணவிகள் தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர். மெட்டல் டிடெக்டர் மூலம் மாணவ, மாணவிகளை போலீஸார் சோதனையிட்டனர்.

தேர்வு அறைக்குள் ஹேர்பின், நகைகள், கொலுசு போன்றவற்றை அணியத் தடை செய்யப்பட்டுள்ளதால், தேர்வு மையங்களுக்குச் செல்லும் முன்னர் மாணவிகள் அவற்றை கழற்றி பெற்றோரிடம் கொடுத்துவிட்டு சென்றனர்.

இந்நிலையில், தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரைச் சேர்ந்த வாசுதேவன் என்பவரின் மனைவி முத்துலெட்சுமி (20). இவர் பாளையங்கோட்டை தூய யோவான் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்துக்கு எழுத வந்தார்.

நகைகளை கழற்ற அறிவுறுத்தல்

கடந்த 2 ஆண்டுகளாக நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்றுவந்த இவருக்கு, 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

தாலிச் செயின், மெட்டி, தலையில் பூ வைத்து வந்த முத்துலெட்சுமியை, தேர்வு மையத்துக்குள் நுழையும் முன் அங்கிருந்த அலுவலர்கள் நகைகளை கழற்றும்படி அறிவுறுத்தியுள்ளனர். தாலிச் செயின் என்பதால் முத்துலெட்சுமி தயங்கியுள்ளார். ஆனால், தேர்வு விதிமுறைப்படி நகைகள் அணிய அனுமதியில்லை என்று அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

உடன் வந்த அவரது கணவர் சம்மதம் தெரிவித்ததும், தாலிச்செயின், மெட்டி ஆகியவற்றை கழற்றி கணவரிடம் முத்துலெட்சுமி கொடுத்தார். தலையில் வைத்திருந்த பூவையும் எடுத்த பின்னரே தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டு அவர் தேர்வு எழுதினார்.

விரைவில் - ஒவ்வொரு கிராமும் ஆன்லைன் சந்தைகளுடன் இணைக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

 

விரைவில் ஒவ்வொரு கிராமும் ஆன்லைன் சந்தைகளுடன் இணைக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் திட்டமான ‘ஸ்வானிதி’ திட்ட பயனாளர்களிடம், பிரதமர் மோடி ‘வீடியோ கான்பரன்சிங்’ மூலம் உரையாற்றினார். இதில் ம.பி., மாநிலம் இந்தூர், குவாலியர் மற்றும் சாஞ்சி பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டனர். ம.பி., முதல்வர் சிவராஜ் சிங் சவுகானும் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: ஏழை, அடித்தட்டு மக்களை கொரோனா அதிகம் பாதித்துள்ளது. அவர்களுக்கு உதவ அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளது. ஸ்வானிதி திட்டத்தில், ஆரம்ப கடன் தொகை ரூ.10 ஆயிரம், உஜ்வாலா திட்ட பலன்கள், ஆயுஷ்மான் பாரத் காப்பீடு ஆகியவற்றை பெறலாம்.

சாலையோர விற்பனையாளர்கள் தங்கள் வியாபாரத்தை மேம்படுத்த ரூ.10 ஆயிரம் கடன் பெற்று, அதனை குறித்த காலத்தில் செலுத்தினால், படிப்படியாக கடன் தொகை அதிகரிக்கப்படும். இத்திட்டத்தில் இணைந்து பயன் பெற எந்த சேவை மையத்தையும் வியாபாரிகள் அணுகலாம்.

ஸ்வானிதி திட்டத்தில், 4.5 லட்சம் நடைபாதை வியாபாரிகள் பதிவு செய்துள்ளனர். இவர்களில் 1.4 லட்சம் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அவர்களுக்கு 140 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. ஆயிரம் நாட்களுக்குள் அனைத்து கிராமங்களுக்கும், ஆப்டிகல் பைபர் இணைப்பு வழங்கப்படும். விரைவில் ஒவ்வொரு கிராமமும் ஆன்லைன் சந்தைகளுடன் இணைக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

பிரான்ஸிலிருந்து முதற்கட்டமாக இந்தியா வரவழைக்கப்பட்ட 5 ரபேல் போர் விமானங்கள்

 

பிரான்ஸிலிருந்து முதற்கட்டமாக இந்தியா வரவழைக்கப்பட்ட 5 ரபேல் போர் விமானங்கள் செப்.10 அன்று முறைப்படி இந்தியா விமானப்படையுடன் இணக்கப்படுகின்றன.

ஹரியானா மாநிலம் அம்பாலாவில் உள்ள விமானப்படை தளத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதில் 5 ரபேல் விமானங்களும் இந்தியா விமானப்படையின் 17 வது படைப்பிரிவான கோல்டன் அரோசிஸில் இணைக்கப்படுகின்றன.

நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் புளோரன்ஸ் பார்லி ஆகியோர் தலைமை வகிக்கின்றனர். அவர்கள் முன்னிலையில் விமானங்கள் இந்திய விமானப்படையில் இணைக்கப்படுகின்றன.

இந்த விமானங்கள் கடந்த ஜூலை 29ம் தேதி பிரான்ஸிலிருந்து இந்தியா வந்தன. நான்கு ஆண்டுகளுக்கு முன் ரூ 59,000 கோடி மதிப்பில் 36 ரபேல் விமானங்களுக்காக இந்தியா பிரான்ஸ் அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மாரியப்பன் தங்கவேல-. ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது

இந்த நாளை மாரியப்பன் தங்கவேலால் மறக்கவே முடியாது.

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகேயுள்ள பெரிய வடகம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன் தங்கவேலு. பிரேசிலின் ரியோ டி ஜெனீரோவில் நடைபெற்ற 2016 பாரா ஒலிம்பிக்ஸ் போட்டியில் உயரம் தாண்டுதலில் 1.89 மீட்டர் உயரம் தாண்டி உலக சாதனையோடு தங்கம் வென்றது இந்த நாளில் தான். அந்தத் தருணம் அவருடைய வாழ்க்கையையே மாற்றிவிட்டது. அன்று முதல் அவர் ஒரு பிரபலம். 
 
இந்தியாவுக்குப் பெருமை சோ்த்ததற்காக, சமீபத்தில் தேசிய விளையாட்டு தினமான ஆகஸ்ட் 29 அன்று ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த்திடமிருந்து பெற்றுக்கொண்டார் மாரியப்பன் தங்கவேலு. 1991-92 முதல் இந்த விருது வழங்கப்படுகிறது. விஸ்வநாதன் ஆனந்துக்குப் பிறகு கேல் ரத்னாவைப் பெறும் 2-வது தமிழக வீரர் என்கிற பெருமையும் கூடுதலாகக் கிடைத்துள்ளது. 
 
2016 பாரா ஒலிம்பிக்ஸில் தங்கம் வென்றவுடன் மாரியப்பன் தங்கவேலுக்கு ரூ. 2 கோடி பரிசுத்தொகையை அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். ரூ. 75 லட்சம் பரிசுத்தொகையை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயல் அறிவித்தார்.
மாரியப்பனின் இந்த வெற்றிக்கு இந்தியாவில் உள்ள அத்தனை பிரபலங்களும் வாழ்த்துகளைத் தெரிவித்தார்கள். 
சேலத்திலிருந்து 50 கி.மீ. தூரத்தில் உள்ள பெரியவடகம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர், மாரியப்பன் தங்கவேலு. 5 வயதில் பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்தபோது சாலையில் ஓரத்தில் சென்றுகொண்டிருந்த மாரியப்பன் மீது பேருந்து மோதியது. இந்த விபத்தில் அவருடைய வலது கால் சிதைந்தது. ‘அதற்குப் பிறகு அந்தக் கால் வளரவேயில்லை. காயங்களும் ஆறவில்லை. என்னுடைய வலது காலுக்கு வயது 5 தான்’ என்கிறார் மாரியப்பன்.
காய்கறி விற்பனை செய்து வந்த அவருடைய அம்மா, மாரியப்பனின் காலைச் சரிசெய்வதற்காக 3 லட்சம் ரூபாய் வரை மருத்துவச்செலவு செய்தார். ‘அதற்கான கடனை இன்னும் அடைத்துவருகிறோம்’ என்று அப்போது பேட்டியளித்தார் மாரியப்பன்.
14 வயதில் பள்ளியில் உயரம் தாண்டுதல் போட்டியில் கலந்துகொண்டு 2-ம் இடம் பிடித்துள்ளார். அதிலிருந்துதான் அவருக்கு இந்த விளையாட்டின் மீது அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
2013-ல் தேசிய அளவிலான போட்டியில் மாரியப்பன் கலந்துகொண்டபோது பயிற்சியாளர் சத்யநாராயணனைச் சந்தித்துள்ளார். மாரியப்பனின் இந்த வளர்ச்சிக்கு அவருடைய பயிற்சியும் ஒரு முக்கிய காரணம். 
கடந்த 2012-ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக்ஸ் போட்டியில் கலந்துகொள்ள மாரியப்பன் தேர்வாகியிருந்தார். ஆனால், கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) கிடைக்க தாமதம் ஆனதால், அவரால் கலந்துகொள்ள முடியவில்லை.
அந்தப் போட்டியில் 1.74 மீட்டர் உயரத்தைத் தாண்டியவர் தங்கப் பதக்கத்தை வென்றார். அப்போதைய தகுதிச் சுற்றில் மாரியப்பன் 1.75 மீட்டர் உயரம் தாண்டியிருந்தார். அந்த வாய்ப்பு கிடைத்திருந்தால், மாரியப்பனுக்கு இது 2-வது தங்கமாக இருந்திருக்கும். 
தந்தை இல்லை, காலில் ஏற்பட்ட விபத்து, இளமைப் பருவத்துக்குரிய எந்த சந்தோஷத்தையும் அனுபவிக்க முடியாத வறுமை என பல்வேறு துன்பங்களுக்கு மத்தியிலும் விடாமுயற்சியுடன் உழைத்த மாரியப்பன் இந்தியாவுக்கும் தமிழகத்துக்கும் பெருமை தேடித் தந்ததுடன், தனது குடும்பத்தை வறுமையில் இருந்து மீட்டுள்ளார்.
2016-ல் மகன் தங்கம் வென்ற பிறகு மாரியப்பனின் தாயார் சரோஜா (50) கூறியதாவது: “எங்களுக்கு சுதா (26) என்ற மகளும், மாரியப்பன் (21), குமார் (20), கோபி (16) ஆகிய மூன்று மகன்களும் உள்ளனர். மூத்த மகன் மாரியப்பனுக்கு 5 வயது இருக்கும்போது, பேருந்து மோதியதில் வலது கால் பாதம் முழுவதும் சேதமடைந்துவிட்டது. உடனடியாக, அரசு மருத்துவமனையில் சேர்த்து குணமாக்கினோம். வடகம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்றபோது, விளையாடுவதற்கு யாரும் தன்னை சேர்த்துக் கொள்ளவில்லை மாரியப்பன் வருந்தினார். பின்னர், அவரின் விளையாட்டு ஆர்வத்தைக் கண்டறிந்த ஆசிரியர்கள், உயரம் தாண்டுதலில் அவரை ஊக்குவித்தனர்.
மாரியப்பன் சிறுவனாக இருக்கும்போதே, அவருடைய தந்தை பிரிந்து சென்று விட்டார். குடும்ப வறுமையைத் தாங்க முடியாமல், அனைவரும் தற்கொலை செய்து கொள்ள எண்ணினோம். ஆனால், மாரியப்பன் தான் அதைத் தடுத்து, கண்டிப்பாக வாழ்க்கை சூழ்நிலை வறுமையில் இருந்து மாறும் என்று கூறி எங்களைத் தேற்றினார். பள்ளி விடுமுறை நாள்களில், கட்டுமான வேலைகளுக்குச் சென்று, அதில் கிடைத்த கூலித் தொகையில் தனக்கான செலவையும், குடும்பத்துக்கும் வழங்கினார்’ என கண்ணீர் மல்கக் கூறினார்.
18 வயதில் பயிற்சியாளர் சத்யநாராயணாவின் கண்ணில் படும் வரை மாரியப்பனின் வாழ்க்கை போராட்டமாக இருந்துள்ளது. 2012 முதல் 2015 வரை என் குடும்பத்தைக் கரை சேர்ப்பதற்காக எல்லாவிதமான உதவிகளையும் செய்தேன் எனச் சமீபத்தில் பிடிஐ நிறுவனத்துக்குப் பேட்டியளித்தார் மாரியப்பன். காலை வேளையில் தினமும் 3 கி.மீ. வரை நடந்து வீடுகளுக்கு செய்தித்தாள் போடும் வேலையைச் செய்துள்ளார். இதன்பிறகு கட்டுமான வேலைகளுக்குச் சென்றுள்ளார். தினமும் ரூ. 200 சம்பாதித்து அதை அப்படியே வீட்டுக்குத் தந்துள்ளார். 

ஆக்ஸ்போர்டு – ஆஸ்ட்ரா செனெகா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி தற்காலிகமாக நிறுத்தம்..

லண்டன்: ஆக்ஸ்போர்டு – ஆஸ்ட்ரா செனெகா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி, மனிதர்களிடம் நடத்தப்படும் 3ம் கட்ட சோதனையின்போது தன்னார்வலர் ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சோதனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வரவில்லை. ரஷ்யா மட்டுமே தற்போது வரையில் தடுப்பூசி கண்டுபிடித்துள்ளதாக கூறியுள்ளது. ஆனாலும், அதில் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆராய்ச்சியாளர்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர். இந்நிலையில், உலகம் முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஆக்ஸ்போர்டு – ஆஸ்ட்ரா செனெகா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி, மனிதர்களுக்கு செலுத்தும் பரிசோதனையில் முதல் 2 கட்ட பரிசோதனைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்தது. இதனையடுத்து தற்போது, மூன்றாம் கட்ட பரிசோதனை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், 3ம் கட்ட பரிசோதனையில், தடுப்பூசி செலுத்தப்பட்ட தன்னார்வலர் ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தடுப்பூசி பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசியை மதிப்பாய்வு செய்ய வேண்டி உள்ளதாலும், பாதுகாப்பு காரணங்களுக்காக பரிசோதனை நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அஸ்ட்ராஜெனெகா நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ‛மருந்து சோதனைகளில் விவரிக்கப்படாத நோய் ஏற்படும்போதெல்லாம் இதுபோன்று பரிசோதனை நிறுத்தி வைப்பது வழக்கமான நடைமுறைதான். தீவிரமாக ஆராய்ந்து, சோதனைகளின் நேர்மையை பராமரிப்பதை உறுதிசெய்கிறோம். மிகப்பெரிய அளவில் சோதனைகள் செய்யப்படும்போது, சில சமயம் நோய்கள் தற்செயலாக ஏற்படும்,’ என்றார்.

சிவகங்கை அருகே ஆசிரியம் பற்றிய 13-ம் நூற்றாண்டு கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு

 

சிவகங்கை அருகே ஆசிரியம் பற்றிய 13-ம் நூற்றாண்டு கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை அருகே கோமாளிபட்டியில் 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த 2 ஆசிரியம் கல்வெட்டுகளை சக்கந்தியைச் சேர்ந்த மலைராஜன் உதவியுடன் கானப்பேரெயில் தொல்லியல் குழுமத்தைச் சேர்ந்த இலந்தக்கரை ரமேஷ், கருங்காலி விக்னேஷ்வரன், காளையார்கோவில் சரவணமணியன் ஆகியோர் கண்டறிந்துள்ளனர்.

கல்வெட்டுகள் குறித்து அவர்கள் கூறியதாவது: ஆசிரியம் என்றால் அடைக்கலம் தருதல், பாதுகாப்பு தருதல் என்று பொருள். ஆசிரியம் சொல்லுடன் காணப்படும் கல்வெட்டுகள் இதுவரை தமிழகத்தில் 70-க்கும் குறைவாகவே கண்டெடுக்கப்பட்டுள்ளன.

பெரும்பாலும் புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் காணப்படுகின்றன.

ஆசிரியம் கல்வெட்டுகள் பெரும்பாலும் தனி கற்களில் பொறிக்கப்பட்டு நடப்பட்டவையாக உள்ளன. சோழர், பாண்டியர்கள் ஆட்சிக்காலத்தில் ஊரவர், நாட்டவர், சிற்றரசர், படைப்பிரிவைச் சார்ந்தோர் தலைமையில் அந்தந்த பகுதிகளில் படைகளை உருவாக்கி ஊர்களை பாதுகாத்து வந்துள்ளனர்.

சோழர், பாண்டியர்களுக்கு பிறகு மதுரை சுல்தான்கள் ஆட்சி காலத்திலும் ஆங்காங்கே படைகள் இருந்தன. ஆனால் அவர்கள் ஆட்சி நிலையற்று இருந்ததால் நாட்டு மக்களின் உடைமைகளுக்கு போதிய பாதுகாப்பு இல்லாமல் போனது.

வணிகர்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டனர்.

இதையடுத்து அவரவர் தங்களது உயிர், உடமைகளை பாதுகாக்க படைகளை வைத்து கொண்டனர். படைவீரர்களுக்கு சில உரிமைகள், வருவாய்களை ஏற்படுத்திக் கொடுத்தனர்.

தற்போது கோமாளிப்பட்டியில் கிடைத்திருக்கும் இரண்டு கல்வெட்டுகளில் ஒன்று பதிமூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியையும், மற்றொன்று பதிமூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியையும் சேர்ந்தது. முற்பகுதியைச் சேர்ந்த கல்வெட்டில் வில், அம்பு சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு மூலம் படைவீரர்கள் கேழாநிலை (தற்போதைய கீழாநிலைக்கோட்டையாக இருக்கலாம்) என்ற ஊரில் தங்கியிருந்து இரட்டகுலகாலபுரம் நகரத்தார்க்கு பாதுகாப்பு தந்துள்ளனர்.

பதிமூன்றாம் நூற்றாண்டு பிற்பகுதியைச் சேர்ந்த கல்வெட்டில் பூரண கும்ப சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு மூலம் குலசேகர பாண்டியன் தனது ஆட்சிக்காலத்தில் படையை உருவாக்கி அப்பகுதிக்கு பாதுகாப்பு தந்துள்ளார் என்பதை காட்டுகிறது, என்று கூறினர்.

400 பயங்கரவாதிகளை ஊடுருவச் செய்ய பாக்., முயற்சிப்பதாக தகவல்கள்

லடாக் எல்லையில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நிலவி வரும் பதற்றமான சூழலை பயன்படுத்தி இந்தியாவுக்குள் 400 பயங்கரவாதிகளை ஊடுருவச் செய்ய பாக்., முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


பாக்., ஏற்பாடு செய்துள்ள 400 பயங்கரவாதிகளும் இரு நாட்டு கட்டுப்பாட்டு எல்லைக்கு அருகே உள்ள முகாம்களில் இருப்பதாக கூறப்படுகிறது. இவர்களை இந்தியாவுக்குள் ஊடுருவச் செய்யும் வேலையில் பாக்., சிறப்பு படைப்பிரிவு செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ ஏதுவாக போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாக்., ராணுவம் எல்லைப் பகுதியில் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்துவதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது.

இது தவிர இந்திய பாதுகாப்பு படை மீது தாக்குதல் நடத்த எல்லை குழுக்களை பாக்., ஏற்பாடு செய்துள்ளது. பயங்கரவாதிகள் குரஜ், மச்சல், கெரான் தங்கார், நவுகம் பகுதிகளில் பதுங்கியுள்ளனர். புலனாய்வுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

ஹைபர்சானிக் சோதனை இன்று வெற்றியடைந்ததற்கு டிஆர்டிஓ-க்கு பாராட்டுகள்.

ஹைபர்சானிக் தொழில்நுட்ப சோதனை வெற்றிகரமாக நிறைவடைந்ததையடுத்து, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புக்கு (டிஆர்டிஓ) பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஒலியைவிட 6 மடங்கு அதிவேகத்தில் ஏவும் திறன் கொண்ட ஹைபர்சானிக் தொழில்நுட்பத்தின் சோதனையை டிஆர்டிஓ இன்று (திங்கள்கிழமை) ஒடிசாவில் மேற்கொண்டது. இந்த சோதனை வெற்றிகரமாக நிறைவடைந்ததையடுத்து, பல்வேறு தரப்புகளிலிருந்து பாராட்டுகள் குவிந்தன. அமெரிக்கா, சீனா, ரஷியாவுக்கு அடுத்தபடியாக இந்த தொழில்நுட்பத்தைப் பெறும் 4-வது நாடு இந்தியா.

இந்த நிலையில், பிரதமர் மோடி இதற்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

சுட்டுரைப் பக்கத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது:

“ஹைபர்சானிக் சோதனை இன்று வெற்றியடைந்ததற்கு டிஆர்டிஓ-க்கு பாராட்டுகள். ஒலியைவிட 6 மடங்கு அதிவேகமாக ஏவுவதற்கு, நமது விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டுள்ள ஸ்கராம்ஜெட் என்ஜின், உதவியுள்ளது. இன்றைய தேதியில் வெகுசில நாடுகளிடம் மட்டுமே இந்தத் திறன் உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார் பிரதமர் மோடி.

காரைக்குடியில் இருந்து சென்னை புறப்பட்ட பல்லவன் சிறப்பு ரயில்.

காரைக்குடியில் இருந்து சென்னை புறப்பட்ட பல்லவன் சிறப்பு ரயில்.
ஐந்து மாதங்களுக்குப் பிறகு காரைக்குடியில் இருந்து சென்னைக்கு பல்லவன் சிறப்பு ரயில் இயக்கப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கரோனா தொற்றை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் 5 மாதங்களாக ரயில்கள் இயக்கப்படவில்லை.

இந்நிலையில் இன்று முதல் கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதில் செப்.7-ம் தேதியில் இருந்து காரைக்குடியில் இருந்து சென்னை செல்லும் பல்லவன் அதிவிரைவு ரயில் சிறப்பு ரயிலாக இயக்கப்படுகிறது.

இந்த ரயில் ஏற்கனவே அதிகாலை 5.05 மணிக்கு காரைக்குடியில் இருந்து புறப்பட்டது. தற்போது அதிகாலை 4.55 மணிக்கு காரைக்குடியில் இருந்து ரயில் புறப்படுகிறது.

அதேபோல் மறுமார்க்கத்தில் சென்னை எழும்பூரில் இருந்து மாலை 3.45 மணிக்கு புறப்படுகிறது. ஐந்து மாதங்களுக்கு பிறகு இயக்கப்பட்டதால் பயணிகள் மகிழ்சசி அடைந்தனர்.

அதேபோல் ஏற்கெனவே ஒருநாள் இடைவெளியில் இயக்கப்பட்டு வந்த சென்னையில் இருந்து செங்காட்டை செல்லும் சிலம்பு ரயில், தற்போது தொடர்ந்து மூன்று நாட்கள் இயக்கப்பட உள்ளது.

செப்.10-ம் தேதி முதல் வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமை இரவு 8.25 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு காரைக்குடியை வந்தடையும். காலை 9 மணிக்கு செங்கோட்டையை அடையும்.

அதேபோல் செப்.12-ம் தேதி முதல் சனி, ஞாயிறு, திங்கட்கிழமை மாலை 4.45 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்படும் ரயில், இரவு 9.30 மணிக்கு காரைக்குடியை வந்தடையும். மறுநாள் அதிகாலை 5.30 மணிக்கு சென்னை எழும்பூரை அடையும்

ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி ஓடைகள், பாறைகளில் திடீர் வெள்ளப்பெருக்கு

 

ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் சனிக்கிழமை இரவு பெய்த கனமழையின் காரணமாக சதுரகிரி ஓடைகள், பாறைகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
 
தமிழகத்தின் வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும்  வெப்பச் சலனம் காரணமாக  விருதுநகர் உட்பட பல்வேறு மாவட்டங்களில்  மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை பெய்யும் எனவும் தெரிவித்திருந்தது.
 
இந்நிலையில், சனிக்கிழமை இரவு மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் சுமார் 4 மணி நேரம் பெய்த கனமழையின் காரணமாக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்குச் செல்லும் மாங்கனி ஓடை, சங்கிலிப் பாறை, வழக்குப் பாறை உள்ளிட்ட ஓடைகளில் நீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அமாவாசை மற்றும் பௌர்ணமியைத் தவிர பக்தர்கள் கோயிலுக்குச் செல்ல அனுமதி இல்லாததால் அதிகாரிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

மத்திய அரசுக்கு முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் அறிவுரை

 

அதிகமாகக் கடன் பெற்று, மக்களிடம் நேரடியாகப் பணத்தைக் கொடுங்கள். பொருளாதாரம் மீட்சிப் பாதைக்கு வந்துவிடும்’ என, மத்திய அரசுக்கு காங்., மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் அறிவுரைகள் வழங்கியுள்ளார்.

கடந்த வாரம் தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் 23.9 சதவீதம் அளவுக்கு வீழ்ச்சி அடைந்தது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்ததற்கு மத்திய அரசை காங்., கட்சியின் தலைவர்கள் ராகுல் காந்தி, ப.சிதம்பரம் உள்ளிட்டோரும், எதிர்க்கட்சித் தலைவர்களும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் நாட்டின் பொருளாதாரம் சரிந்துள்ள நிலையில், அதை மீண்டும் மீட்சிப் பாதைக்குக் கொண்டுவருவது குறித்து பல்வேறு ஆலோசனைகளை ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று பகிர்ந்துள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது:

Here are are some concrete steps to raise money:

1. Relax the FRBM norm and borrow more this year

2. Accelerate disinvestment

3. Use the offer of USD 6.5 billion by IMF, WB, ADB etc

4. As last resort, monetize part of the deficit


மத்திய அரசு பணத்தைத் திரட்டிக்கொள்ள சில வழிமுறைகளைக் கூறுகிறேன்.
இந்த ஆண்டு நிதிப் பொறுப்பையும் பட்ஜெட் மேலாண்மையையும் சற்று தளர்த்தி அதிகமாகக் கடன் பெறுங்கள். அரசு நிறுவனங்கள் மீது மத்திய அரசுக்கு இருக்கும் பங்குகள் விற்பதை விரைவுபடுத்துங்கள். உலக வங்கி, பன்னாட்டு நிதியம், ஆசிய மேம்பாட்டு வங்கி ஆகியவை அளிப்பதாகத் தெரிவித்துள்ள 6,500 கோடி டாலர் நிதியை பயன்படுத்துங்கள். கடைசி முயற்சியாக, பற்றாக்குறையின் ஒரு பகுதியைப் பணமாக அச்சிடுங்கள்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டிவிடவும், சந்தையில் தேவையை, நுகர்வை அதிகரிக்கவும் சில உறுதியான நடவடிக்கைகள் தேவை. நாட்டில் உள்ள ஏழைக் குடும்பங்களில் 50 சதவீதம் பேருக்கு நேரடியாகப் பணத்தை வழங்கிடுங்கள். நாட்டில் உள்ள அனைத்துக் குடும்பத்தினருக்கும் இலவசமாக உணவு தானியத்தை வழங்கிடுங்கள். தேவைப்படுவோர் வாங்கிக் கொள்ளட்டும்.

உள்கட்டமைப்புத் திட்டங்களுக்குச் செலவிடுவதை அதிகப்படுத்துங்கள். உணவு தானிய இருப்பைப் பயன்படுத்தி ஊதியம் வழங்கிடுங்கள். மிகப்பெரிய அளவில் பொதுப் பணிகளைத் தொடங்கிடுங்கள். வங்கிகளுக்குத் தேவையான மறு முதலீடுகளை வழங்கிடுங்கள். மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி., நிலுவைத் தொகையை வழங்குங்கள். இவை அனைத்துக்கும் பணம் தேவை. ஆகவே, கடன் பெறுங்கள். தயக்கம் காட்டாதீர்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது 14 ஆட்டங்களில் யாருடன் விளையாடுகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது 14 ஆட்டங்களில் யாருடன் விளையாடுகிறது. எங்கே விளையாடுகிறது என்ற முழு விவரம் கொடுக்கப்பட்டுள்ளது.


சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது 14 ஆட்டங்களில் யாருடன் விளையாடுகிறது. எங்கே விளையாடுகிறது என்ற முழு விவரம் கொடுக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் 13-வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகிற 19-ந்தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான போட்டி அட்டவணை இன்று மாலை வெளியிடப்பட்டது.
முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – சென்ன சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. நவம்பர் 3-ந்தேதி வரை லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் 14 போட்டிகளின் விவரம் வருமாறு:-
1. செப்டம்பர் 19-ந்தேதி சனிக்கிழமை – சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை – அபு தாபி (இரவு 7.30 மணி)
2.  செப்டம்பர் 22-ந்தேதி – செவ்வாய்க்கிழமை – சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் – ஷார்ஜா (இரவு 7.30 மணி)
3.  செப்டம்பர் 25-ந்தேதி – வெள்ளிக்கிழமை – சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் – துபாய் (இரவு 7.30 மணி)
4. அக்டோபர் 2-ந்தேதி – வெள்ளிக்கிழமை – சென்னை சூப்பர் கிங்ஸ் –  சன்ரைசர்ஸ் ஐதராபாத் – துபாய் (இரவு 7.30 மணி)
5. அக்டோபர் 4-ந்தேதி – ஞாயிற்றுக்கிழமை – சென்னை சூப்பர் கிங்ஸ் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் – துபாய் (இரவு 7.30 மணி)
6. அக்டோபர் 7-ந்தேதி – புதன்கிழமை – சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – அபு தாபி (இரவு 7.30 மணி)
7. அக்டோபர் 10-ந்தேதி சனிக்கிழமை – சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – துபாய் (இரவு 7.30 மணி)
8. அக்டோபர் 13-ந்தேதி – செவ்வாய்க்கிழமை – சென்னை சூப்பர் கிங்ஸ் – சன் ரைசர்ஸ் ஐதராபாத் – துபாய் (இரவு 7.30 மணி)
9. அக்டோபர் 17-ந்தேதி – சனிக்கிழமை – சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் – ஷார்ஜா (இரவு 7.30 மணி)
10. அக்டோபர்  19-ந்தேதி – திங்கட்கிழமை – சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் – அபு தாபி (இரவு 7.30 மணி)
11. அக்டோபர் 23-ந்தேதி – வெள்ளிக்கிழமை – சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் – ஷார்ஜா (இரவு 7.30 மணி)
12. அக்டோபர் 25-ந்தேதி – ஞாயிற்றுக்கிழமை – சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (மதியம் 3.30 மணி)
13. அக்டோபர் 29-ந்தேதி – வியாழக்கிழமை – சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – துபாய் (இரவு 7.30 மணி)
14. நவம்பர் 1-ந்தேதி – ஞாயிற்றுக்கிழம – சென்னை சூப்பர் கிங்ஸ் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் – அபு தாபி (மதியம் 3.30 மணி)

ஐ.பி.எல்., தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டது.

 

புதுடில்லி: ஐ.பி.எல்., தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டது. 19ல் துவங்கும் முதல் போட்டியில், சென்னை அணி மும்பை அணியை எதிர்கொள்கிறது.

ஐ.பி.எல்., தொடரின் 13வது சீசன் ஐக்கிய அரபு எமீரேட்சில் செப்., 19 முதல் நவ.10 வரை நடக்க உள்ளது. 53 நாட்களில் 60 போட்டிகள் நடக்க உள்ளன. இதற்காக யு.ஏ.இ., சென்ற அணிகள் பயிற்சியை துவக்கியுள்ளன. இதனால், தொடர் அட்டவணை எப்போது வெளியாகும் என எதிர்பார்ப்பு எழுந்தது.

இந்நிலையில், தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டது. 19ம் தேதி அபுதாபியில் துவங்கும் முதல் போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன. ஒரு போட்டி மட்டும் நடக்கும் நாட்களில், போட்டி, இந்திய நேரப்படி இரவு 7: 30 மணிக்கு துவங்குகிறது. இரண்டு போட்டிகள் நடக்கும் நாட்களில், முதல் போட்டி மாலை 3: 30 மணிக்கும், இரண்டாவது போட்டி இரவு 7:30 மணிக்கும் துவங்குகிறது.

அட்டவணை

latest tamil news
latest tamil news
latest tamil news

Advertisement

பெங்களூருவில் பெண் ஒருவர் 2-வது முறை கரோனா வைரஸ்

 

பெங்களூருவில் பெண் ஒருவர் 2-வது முறை கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். அங்கு 2-வது முறையாக பாதிப்புக்குள்ளாகும் முதல் நபர் இவர்.
இதுபற்றி பெங்களூருவிலுள்ள தனியார் மருத்துவமனை தெரிவித்திருப்பதாவது:
“பெங்களூருவில் முதன்முறையாக 27 வயது பெண் ஒருவர் கரோனா தொற்றால் மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த ஜூலை மாதம் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, தொற்று பாதிப்பு இல்லை என்பது உறுதியானதையடுத்து, அவர் வீடு திரும்பினார். எனினும், ஒரு மாதத்துக்குப் பிறகு அவருக்கு லேசான அறிகுறிகள் இருந்தன. இதையடுத்து, அவருக்கு கரோனா தொற்று இருப்பது மீண்டும் உறுதியானது.”

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் வடக்கு பகுதியில் இன்று காலை லேசான நிலநடுக்கம்

 

நிலநடுக்கம்
 
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் வடக்கு பகுதியில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

மும்பை:

மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பையின் வடக்கு பகுதியில் இன்று காலை 6.36 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 2.7 ரிக்டர் அளவில் பதிவானது என தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 13 சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு இன்று காலை தொடங்கியது.

தமிழகத்தில் 13 சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு இன்று காலை தொடங்கியது.

சென்னை:

தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்துக்கு வரும் 7-ந்தேதி முதல் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில் 7-ந்தேதி முதல் சிறப்பு ரெயில்களை இயக்க தெற்கு ரெயில்வே முடிவு செய்துள்ளது. அதன்படி நேற்று முன்தினம் சென்னையில் இருந்து, கோவை, மதுரை, தூத்துக்குடி, திருச்சி, காரைக்குடி மற்றும் கோவையில் இருந்து மயிலாடுதுறைக்கும் 9 சிறப்பு ரெயில்களை அறிவித்தது.

 நேற்று,  தெற்கு ரெயில்வே மேலும் கூடுதலாக 4 சிறப்பு ரெயில்களை அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

* சென்னை எழும்பூர்- செங்கோட்டை (வண்டி எண்: 06181) இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரெயில் வருகிற 10-ந்தேதி முதல் வியாழன், வெள்ளி, சனிக்கிழமைகளில் இரவு 8.25 மணிக்கு எழும்பூர் ரெயில் நிலையத்தில் புறப்பட்டு, மறுநாள் காலை 9 மணிக்கு செங்கோட்டை சென்றடையும்.

இதேபோல் மறுமார்க்கமாக செங்கோட்டை- எழும்பூர் (06182) இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரெயில் வருகிற 11-ந்தேதி முதல் வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் மாலை 4.45 மணிக்கு செங்கோட்டை ரெயில் நிலையத்தில் புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 5.30 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.

* எழும்பூர்- கன்னியாகுமரி (02633) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் வருகிற 8-ந்தேதி முதல் மாலை 5.15 மணிக்கு எழும்பூர் ரெயில் நிலையத்தில் புறப்பட்டு மறுநாள் நாள் காலை 6.20 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும்.

இதேபோல் மறுமார்க்கமாக கன்னியாகுமரி-எழும்பூர் (02634) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் வருகிற 9-ந்தேதி முதல் மாலை 5.05 மணிக்கு கன்னியாகுமரி ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 6.15 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.

* சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல்-மேட்டுப்பாளையம் (02671) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் வருகிற 7-ந்தேதி முதல் இரவு 9.05 மணிக்கு சென்டிரல் ரெயில் நிலையத்தில் புறப்பட்டு மறுநாள் காலை 6.15 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடையும்.

இதேபோல் மறுமார்க்கமாக மேட்டுப்பாளையம்-சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் (02672) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் வருகிற 8-ந்தேதி முதல் மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.50 மணிக்கு சென்னை வந்தடையும்.

* திருச்சி-நாகர்கோவில் (02627) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் வருகிற 7-ந்தேதி முதல் காலை 6 மணிக்கு திருச்சி ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு மதியம் 1 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.

மறுமார்க்கமாக நாகர்கோவில்-திருச்சி (02628) இடையே அன்று மதியம் 3 மணிக்கு நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு திருச்சிக்கு சென்றடையும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த 13 சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கியது. கொரோனா முன்னெச்சரிக்கை விதிகளை பின்பற்றி  ரெயில் சேவை இயக்கப்பட உள்ளது.

5 மாதங்களுக்கு பிறகு ரெயில் செல்லவிருப்பதால் மக்கள் ஆர்வத்துடன் முன்பதிவு செய்து வருகின்றனர்.

சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் பயணிகள் தனிமனித இடைவெளியுடன் டிக்கெட்டு பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேர்வில் தோல்வி அடைந்த 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மறுதேர்வு 22ந்தேதி தொடங்க உள்ளதாக சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது.

 சிபிஎஸ்இ

     தேர்வில் தோல்வி அடைந்த 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மறுதேர்வு 22ந்தேதி தொடங்க உள்ளதாக சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது.

சென்னை:

சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில் தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு மறுதேர்வு தொடர்பான அறிவிப்பை மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) அறிவித்து இருக்கிறது.

அதன்படி, 10-ம் வகுப்புக்கு மறுதேர்வு வருகிற 22-ந்தேதி தொடங்கி, 28-ந்தேதியுடன் நிறைவு பெறுகிறது. அதேபோல், 12-ம் வகுப்புக்கான மறுதேர்வு 22-ந்தேதி ஆரம்பித்து, 30-ந் தேதியுடன் முடிவடைகிறது.

இந்த 2 தேர்வுகளும் ஒவ்வொரு நாளும் காலை 10.30 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1.30 மணி வரை நடைபெற இருக்கிறது.

மாற்றுத் திறனாளி உறவினரை கவனித்துவரும் அரசு ஊழியர்களுக்கு இடமாற்றத்தில் இருந்து நிபந்தனையுடன் விலக்களிக்க உத்தரவு

 

மாற்றுத் திறனாளி உறவினரைகவனித்துவரும் அரசு ஊழியர்களுக்கு இடமாற்றத்தில் இருந்து நிபந்தனையுடன் விலக்களிக்கும் வகையில் தமிழகஅரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.


தமிழக அரசு ஊழியர்களைப் பொறுத்தவரை ஒரு பணியிடத்தில் 3 ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றினால், இடமாற்றம் செய்யும் நடைமுறை இருந்து வருகிறது. அரசுப் பணியில் ஏ, பி, சி பிரிவில் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தற்போது உறவினரைகவனித்துவரும் அரசுப் பணியாளர்களுக்கு இடமாற்றத்தில் இருந்து நிபந்தனையுடன் கூடிய விலக்களித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுறித்து தமிழக பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறைச் செயலர் ஸ்வர்ணா வெளியிட்ட அரசாணை:

மனநலம் பாதிக்கப்பட்ட அல்லது குழந்தைகளை உடைய அரசு ஊழியர்கள், ஒரே இடத்தில் 3 ஆண்டுகள்பணியாற்றினால், அந்த ஆண்டுமுடிவதற்கு முன் இடமாற்றத்தைநிறுத்தி வைக்க அரசிடம் கோரிக்கை வைத்தால் 5 ஆண்டுவரை இடமாற்றம் நிறுத்தி வைக்கப்படுகிறது.

விலக்கு அளிக்கலாம்

இந்நிலையில், கடந்த 2018-ம்ஆண்டு அக்டோபர் மாதம் மத்தியஅரசு அனுப்பிய கடிதத்தில், மாற்றுத் திறனாளிகள் சட்டப்படி,குறைபாடுகளை கொண்ட மகன், மகள், பெற்றோர், வாழ்க்கைத் துணை, சகோதரர் அல்லது சகோதரி என இவர்களில் ஒருவரை கவனித்துவரும் பட்சத்தில், அந்த அரசு ஊழியரை நிர்வாக வசதிக்காக இடமாற்றம் அல்லது சுழற்சி இடமாற்றம் செய்வதில் இருந்துவிலக்கு அளிக்கலாம் என கூறப்பட்டிருந்தது.

சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்

இதை ஏற்று, வழக்கமாக ஆண்டுதோறும் ஏப்ரல் 1 முதல் மே 31-ம் தேதிக்குள் இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்படும் நிலையில், உறவினரை கவனித்து வரும் அரசுஊழியர்களுக்கு இடமாற்றத்தில் இருந்து நிபந்தனையுடன்விலக்களிக்கப்படுகிறது. அதேநேரம் அந்த அரசு ஊழியரால்கவனிக்கப்படுபவர், மாற்றுத் திறனாளிகள் சட்டத்தின்கீழ் கொடுக்கப்பட்டுள்ள குறைபாடுகளைக் கொண்டவர் என்பதற்கு சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சத்துணவில் முட்டை வழங்க அனுமதி

 

சத்துணவில் முட்டை வழங்க அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள் ளது.

    தமிழகத்தில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை படித்து வந்த 49 லட்சத்து 85 ஆயிரத்து 335 மாணவ,மாணவிகளுக்கு சத்துணவு வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கரோனா ஊரடங்கால் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டதால் மாணவர்களுக்கு சத்துணவு வழங்கப்படவில்லை. இதற்கிடையே, பள்ளிகள் திறக்கும் வரை 1 முதல்8-ம் வகுப்பு வரையுள்ள மாணவ, மாணவிகளுக்கு அரசி, பருப்பு ஆகிய உலர் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
சத்துணவு திட்டத்தின்கீழ் வழங்க தமிழகஅரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, சத்துணவில் மாணவ, மாணவிகளுக்கு முட்டைவழங்க அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.



இதுதொடர்பாக, தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில், ’’தொடக்கப்பள்ளி, உயர் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு ஏற்கெனவே வழங்கப்படும் உலர் உணவு பொருட்களுடன் செப்டம்பர் முதல் பள்ளிகள் திறக்கப்படும் வரை மாதம் ஒன்றுக்கு ஒரு மாணவருக்கு 10 முட்டை வழங்க அனுமதிவழங்கப்படுகிறது. பள்ளிக் கல்வித்துறையினால் கல்வி உபகரணங்கள் வழங்கப்படும்போதே உலர்உணவு பொருட்கள் மற்றும் முட்டைகளையும் வழங்க வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.